மேலும் நாடு மூடப்படுமாயின் நாட்டுக்கு நடக்கப்போவது இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் நாடு மூடப்படுமாயின் நாட்டுக்கு நடக்கப்போவது இது தான்!

கொரோனா பரவல் காரணமாக நாடு தொடர்ந்து மூடப்படுமாயின், பொருளாதாரம் பெரும் ஆபத்தில் சிக்க நேரிடும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

சுகாதாரத் துறையில் தற்போது இருக்கும் ஆபத்தை விட பொருளாதார சவாலுக்கு அதிக ஆபத்து இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டை மூடுவதினால் சுகாதா துறைக்கு கிடைக்கும் நன்மைகளை விட பொருளாதார வீழ்ச்சியின் ஆபத்து அதிகளவில் இருக்கும் என கொழும்பின் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு மூடப்படுமிடத்து, அரசாங்க வருவாய் வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு இருப்புக்கள் குறைந்து வருவது தற்போதைய பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையை மேலும் மூடுவது நீண்ட கால மற்றும் நடுத்தர கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பணவீக்கம் மே மாதத்தில் கடுமையாக உயர்ந்து ஏப்ரல் மாதத்தில் 6.1 சதவீதமாக இருந்தது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.