ரிஷாடை நாளை அழைத்து வர வேண்டும்! சி.ஐ.டியின் பணிப்பாளருக்குக் கடிதம் மூலம் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாடை நாளை அழைத்து வர வேண்டும்! சி.ஐ.டியின் பணிப்பாளருக்குக் கடிதம் மூலம் கோரிக்கை!


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாளை (07) நடைபெறும் கட்சித் தலைவர் கூட்டத்திலும், நாளை மறுநாள் (08) நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளுக்கு அழைத்து வர வேண்டுமென பாராளுமன்ற படைக்களச் சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ, சி.ஐ.டியின் பணிப்பாளருக்குக் கடிதம் ஒன்று ஊடாக அறிவித்துள்ளார்.


ரிஷாட் பதியூதினின் கோரிக்கைக்கு ​ஏற்ப அவரை சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கும், பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.


பாராளுமன்றம் நுழைவாயில் வரையில் ரிஷாட்டை சி.ஐ.டியினர் அழைத்து வந்து, அதன் பின்னர் பாராளுமன்ற பொலிஸாரிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும், பாராளுமன்றத்துக்குள் ரிஷாட்டை பாராளுமன்ற பொலிஸாரே அழைத்து வருவார்களெனவும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை நாளை மறுதினம் பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டுவதா? இல்லையா? என்பதுத் தொடர்பில் நாளைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.