முதியோர் இல்லம் ஒன்றில் பௌத்த பிக்கு அடித்துக் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதியோர் இல்லம் ஒன்றில் பௌத்த பிக்கு அடித்துக் கொலை!


பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளிற்கான முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.


குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே, பௌத்த பிக்குவின் தலையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.


நேற்று (19) காலை பிக்கு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.


அந்த தங்குமிடத்தில் 18 வயோதிபர்கள் உள்ளனர். முறையான அனுமதி பெற்று அந்த தங்குமிடம் இயங்குகிறதா என்பதையும் பொலிஸார் ஆராய்கின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.