சற்றுமுன்னர் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன்னர் புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு!


நாட்டில் பயணக் கட்டுப்பாடு நாளை (21) தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் செயற்பட வேண்டிய முறை குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, வீடொன்றிலிருந்து இருவருக்கு மாத்திரமே வெளியேற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மற்றும் வாடகை வாகனங்களில் இருவருக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் தேவையான உத்தியோகத்தர்களை மாத்திரம் கடமையில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி பட்டறை, கூட்டங்கள் ஆகியனவற்றிற்கு தேவையேற்படின் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், திருமண பதிவுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை நிலையங்களில் அமர்ந்து மது அருந்துதல் மற்றும் களியாட்ட விடுதிகளில் மது அருந்துதலுக்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் அடகு விற்பனை நிலையங்கள் நாளை திறக்கப்படும் என்பதோடு, 10 வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் சேவையை வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிகையலங்கார நிலையங்களில் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகள் நாளை திறக்கப்படும் என்பதோடு 3 வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் ஒரே நேரத்தில் சேவை வழங்கப்பட வேண்டும் ஆகிய விதிமுறைகள் உள்ளிட்ட 46 விதிமுறைகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விதிமுறைகள் அடங்கிய கோவை எதிர்வரும் ஜுலை மாதம் ஐந்தாம் திகதி வரை நடைமுறையில் காணப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.