நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செலயாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் இடையே மீண்டும் மோதல் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தை எங்கள் மக்கள் சக்தி வென்றது.
எனினும் அந்தக் கட்சி சார்பாக போட்டியிட்ட ரதன தேரர் மற்றும் ஞானசார தேரருக்கு இடையே பாரிய சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இறுதியாக 03 மாதங்களுக்கு ரத்தன தேரருக்கு ஆசனத்தை விட்டுக்கொடுத்த ஞானசார தேரர் இணங்கியிருந்தார்.
இதற்கமைய கடந்த ஜனவரி மாதத்தில் ரதன தேரர் எம்.பியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
ரத்தன தேரருக்காக 06 மாதங்கள் என்றாலும் ஆசனத்தை வழங்கத் தயார் என்று ஞானசார தேரர் தெரிவித்த பிரகாரம், அதன் கால எல்லை ஜுலை மாதம் 05ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
இந்நிலையில் எம்.பி பதவியை ரதன தேரர் வாக்களித்தபடி தனக்கு வழங்காவிட்டால் கட்சி சார்பாக எம்.பி இவர்தான் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்ப ஞானசார தேரர் தீர்மானித்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.