விளக்கமறியலில் இருந்து வீடு திரும்பிய நபருக்கு “தென் செப த - දැන් සැපද“ என்று தொலைபேசியில் அழைத்த நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விளக்கமறியலில் இருந்து வீடு திரும்பிய நபருக்கு “தென் செப த - දැන් සැපද“ என்று தொலைபேசியில் அழைத்த நபர் கைது!

மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோவை தொலைபேசியில் அழைத்து, “இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா” ( தென் செப த? - දැන් සැපද) என்று கேட்ட ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொரட்டுவ தடுப்பூசி நடவடிக்கைகளைத் தடுத்ததற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து மேயர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோது அந்த நபர் தொலைபேசி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேயர் பொலிஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபருக்கும் மேயருக்கும் இடையில் கடந்த காலங்களில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.