
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்ற பாடசாலைகள் தற்போதைய நிலைமையில் திறக்க முடியாது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.
அவ்வாறு பாடசாலைகளைத் திறந்தால் மாணவர்களின் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று்ம அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றியபோது கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மருத்துவத்துறை விசேட நிபுணர்களின் ஆலோசனைப்படி பாடசாலைகளை மீளத்திறப்பதற்குரிய திகதி தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.