நாட்டில் பயணத்தடை இடையே அதிகரித்தது கோதுமை மா விலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் பயணத்தடை இடையே அதிகரித்தது கோதுமை மா விலை!


பிரீமா நிறுவனம் மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் கோதுமை மாவின் விலையை சடுதியாக அதிகரித்துள்ளது.


இவ் விலை அதிகரிப்பு நேற்று (01) முதல் அமுலாகும் வகையில் இடம்பெற்றுள்ளது.


இதற்கமைய ரொட்டிக்கான கோதுமை மா ஒரு கிலோகிராம் 4 ரூபாவினாலும், பிஸ்கட் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் கோதுமை மா ஒரு கிலோகிராம் 6 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனத்தின் வர்த்தக பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.


இதனடிப்படையில், ரொட்டிக்கான கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் கொத்து, பரோட்டா போன்ற உணவு வகைகளினதும் பிஸ்கட் வகைகளினதும் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கூடியளவு காணப்படுகின்றன.


இந்த மா அதிகரிப்பிற்கான காரணமாக உலக சந்தையில் மாவின் வகைகளின் விலை அதிகரித்தமையினால் இவ்வாறு உள்நாட்டிலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்துள்ளது.


எவ்வாறாயினும் விலை அதிகரிப்புக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் பிரீமா நிறுவனத்திற்கு அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.