எரிபொருள் விலை அதிகரிப்பு - பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலை அதிகரிப்பு - பஸ் கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றதா?

எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் உரிமையாளர்களுக்கு விஷேட சலுகைப் பொதியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எக்காரணத்திற்காகவும் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அவர், எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மேற்படி சலுகைப் பொதியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் இந்த வாரத்தில் பஸ் உரிமையாளர்களுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ளாமல் பயணிகள் போக்குவரத்துத் துறையை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.