மதுபான கடைகள் மூடுவதினால் அரசுக்கு தினசரி நட்டம் எவ்வளவு தெரியுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதுபான கடைகள் மூடுவதினால் அரசுக்கு தினசரி நட்டம் எவ்வளவு தெரியுமா?

மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதனால் ஒரு நாளில் அரசாங்கம் நூறு கோடி ரூபாவினை இழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி அமைச்சு வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கப்பெறும் நிறுவனங்களில் தேசிய இறைவரி திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்திற்கு அடுத்தபடியாக மதுவரித் திணைக்களத்தின் ஊடாக வருமானம் ஈட்டப்படுகின்றது.

நீண்ட நாட்களுக்கு மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளது.

பயணத்தடை காலம் முடியும் வரையில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.