சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 04 வழக்குகளை கொண்ட 64 பேரையும் எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு எழுத்து மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் களுவாஞ்சிக்குடி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களின் மேலதிக நீதவானுமான கருப்பையா ஜீவராணி இன்று (17) உத்தரவிட்டார்.


கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் காத்தான்குடியை சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.


இவர்களில் 05 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்த 58 பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் மற்றும் சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பிரயாணம் செய்ய பஸ் வண்டி ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 06 பேர் உட்பட 64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் குறித்த வெவ்வேறு 04 வழக்கு இலக்கங்களை கொண்ட 69 பேரின் வழக்குகள் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.


இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட 05 பேரும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.


ஏனைய 64 பேரும் நாட்டின் வெவ்வேறு மாவட்டத்திலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக அவர்களை அழைத்து வரமுடியாததாலும் அவர்களை எதிர்வரும் 01 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எழுத்து மூலம் உத்தரவிட்டார்.


-சரவணன்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.