5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு இருக்கின்றதா எனக்கேட்டு பெண்ணொருவர் சமூர்த்தி அதிகாரியை தாக்கிய சம்பவம் ஒன்று இரத்தினபுரி மாவட்ட கொலோன்ன பிரதேச செயலாளர் பிரிவின் கெப்பனே கிராமத்தில் பதிவாகியது.
புஸ்வெல்பிட்டிய விகாரையில், மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை விநியோகிக்க சென்ற சமூர்த்தி அதிகாரியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
தாக்கிய பெண் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு தனக்கு இருக்கின்றதா என சமூர்த்தி அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
அவருக்கு இல்லை என கூறியதும் சமூர்த்தி அதிகாரி மோட்டார் சைக்கிளில் இருந்தபோது, அந்த பெண் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி அது குறித்து பனாமுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.