மூன்றாவது கொரோனா நெருக்கடி நிலைமை சற்று கடினமாக உள்ள போதும் அதனை நிச்சயமாக நாம் வெற்றி கொள்வோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
இது விடயமாக அவர் நேற்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்,
பல வளர்ச்சியடைந்த உலக நாடுகளுக்கு முடியாததை நாம் சாதித்துக் காட்டினோம் தற்போதைய நிலைமை சற்று கடினமானது தான். ஆனால் இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு போதாது.
அதனால் சட்டங்களை கடுமைப்படுத்தி சட்டத்துக்கு முரணாக செயல்படுகின்றவர்களது தண்டனைகளை அதிகரித்தாவது இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 5000 ரூபா அபராதத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் 50 ஆயிரம் வரையில் அதிகரித்து சட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம்.
இவ்விடயத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் முழுமையான பங்களிப்புடன் இலக்கினை அடைய முயற்சிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
இது விடயமாக அவர் நேற்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்,
பல வளர்ச்சியடைந்த உலக நாடுகளுக்கு முடியாததை நாம் சாதித்துக் காட்டினோம் தற்போதைய நிலைமை சற்று கடினமானது தான். ஆனால் இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு போதாது.
அதனால் சட்டங்களை கடுமைப்படுத்தி சட்டத்துக்கு முரணாக செயல்படுகின்றவர்களது தண்டனைகளை அதிகரித்தாவது இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 5000 ரூபா அபராதத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் 50 ஆயிரம் வரையில் அதிகரித்து சட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம்.
இவ்விடயத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் முழுமையான பங்களிப்புடன் இலக்கினை அடைய முயற்சிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.