டொலர் ஒன்றின் பெறுமதி இலங்கை ரூபா 300 ஐ தொடும் அபாயம்! - காரணம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டொலர் ஒன்றின் பெறுமதி இலங்கை ரூபா 300 ஐ தொடும் அபாயம்! - காரணம் இது தான்!

ஐரோப்பா வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை இலங்கை இழந்தால் டொலர் ஒன்றின் மதிப்பு ரூ. 300 ஐ கடந்து செல்லக்கூடும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சலுகையினூடாக வரி செலுத்தாலம் ஐரோப்பாவிற்கு பொருட்களை அனுப்பக்கூடிய அனுமதி கிடைக்கும் என்று தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக இலங்கை பொருளாதாரம் ஆபத்தில் இருக்கும் நேரத்தில் இந்த சலுகையின் இழப்பு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு தமது வேலைகள் இழக்க நேரிடும் என்றும், சூழ்நிலையை எதிர்கொண்டு சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.