ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்! என் மனைவி கூறியது பொய்யா? கணவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்! என் மனைவி கூறியது பொய்யா? கணவர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!!


தென்னாப்பிரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெண்ணொருவர் பெற்றெடுத்ததாக கூறப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக அதை நான் நம்பவில்லை என அவர் கணவர் தற்போது தெரிவித்துள்ளார்.


தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் ஒரு வாரத்துக்கு முன்னர் 37 வயதான Gosiame Sithole ஒரே பிரசவத்தில் 10 பிள்ளைகளை பெற்றெடுத்ததாக கூறப்பட்டது.


ஒரே பிரசவத்தில் 09 குழந்தைகளை பெற்றெடுத்ததே உலக சாதனையாக இருந்த நிலையில் தற்போது Gosiame Sithole 10 பிள்ளைகளை பெற்றெடுத்தது புதிய சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இந்த விடயத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிரடி திருப்பம் ஏற்பட்டது. அதன்படி Gosiame Sithole வின் கணவர் Tebogo Tsotetsi மற்றும் அவர் குடும்பத்தார் இது பொய்யாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், Gosiameவை என்னால் தொடர்பு கொண்டு அவரின் கூற்றை சரிபார்க்க முடியாததால் அவர் 10 குழந்தைகளைப் பெற்றெடுக்கவில்லை என்று நான் கருதுகிறேன்.


குறிப்பாக தொலைபேசி தகவல் மற்றும் வாட்ஸ்அப் செய்தியை தவிர இதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை, நான் 10 குழந்தைகளின் புகைப்படங்களை பார்க்கவில்லை. எனது மனைவி ஒரு குழந்தையின் புகைப்படத்தை மட்டுமே எனக்கு அனுப்பினார்.


குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என்பதை Gosiame Sithole வெளியிட மறுப்பதால் அவருக்கு பணம் நன்கொடை வழங்குவதை மக்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.


நான் கடைசியாக கடந்த ஜூன் மாதம் 07ஆம் திகதி என் மனைவியை பார்த்தேன்,பிரசவ வலியோடு அவர் அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


இதற்கு அடுத்தநாள் எனக்கு Gosiame வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினார். அதில் 04 மருத்துவர்கள், 05 செவிலியர்கள் உதவியுடன் 07 ஆண் குழந்தைகள் மற்றும் 03 பெண் குழந்தைகள் 29 வார கர்ப்பத்தில் தனக்கு பிறந்துள்ளதாக தெரிவித்தார்.


ஆனால் கொரோனா அச்சம் காரணமாக மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்தார். ஆனால் ஒரு தந்தையாக நான் குழந்தைகளை பார்க்க வேண்டும் என கூறியும் அது நடக்கவில்லை.


தான் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் தானும் குழந்தைகளை பார்க்கவில்லை எனவும் Gosiame கூறினார். சில நாட்களாக அவரை காணவில்லை, இது குறித்து புகார் கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.


இதனிடையில் Gosiame அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட 02 மருத்துவமனைகளிலும் அவருக்கு எந்தவொரு சிகிச்சையும், பிரசவமும் நடக்கவில்லை என மருத்துவர்கள் கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.