LTTE ஐ விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது! அதனை இல்லாதொழிக்கவே கோட்டாபய ஆட்சி வந்துள்ளது! -ஜயந்த சமரவீர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LTTE ஐ விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது! அதனை இல்லாதொழிக்கவே கோட்டாபய ஆட்சி வந்துள்ளது! -ஜயந்த சமரவீர


தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை விட இஸ்லாமிய அடிப்படைவாதம் பாரதூரமானது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிக்கவே 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.


ஆகவே, இவ்விடயத்தில் அரசு பொறுப்புடன் செயற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற காலத்தில் இருந்து மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்த முடியாத துரதிஷ்ட நிலை ஏற்பட்டது. இம்முறை மே தினக் கூட்டத்தை வெகு விமர்சையாக நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.


புத்தாண்டு கொரோனா கொத்தணியின் காரணமாக உழைக்கும் வர்க்கத்தினரை ஒன்றிணைத்து கூட்டங்களை நடத்த முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.


தேசிய சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் ஒரு நாடு - ஒரு சட்டம், அனைவருக்கும் சமவுரிமை என்ற இலக்குக்கு அமைய இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடியது.


நாட்டு மக்கள் அனைவரும் பொதுச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். பொதுச் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு தரப்பினர் செயற்படும்போது முரண்பாடுகள் மாத்திரம் தோற்றம் பெறும். தமிழ்ப் பிரிவினைவாதம் நாட்டின் அரசமைப்புக்கு முரணாகச் செயற்பட்டதாலேயே பாரிய விளைவுகள் நாட்டில் ஏற்பட்டன.


தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த உழைக்கும் வர்க்கத்தினர் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று பல்வேறு சவால்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தோற்றம் பெற்றுள்ளன. சவால்களை வெற்றிகொள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.