அதற்கு பதிலாக பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் கிராம சேவகர் பிரிவுகள் சில நாளை (03) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரக்கப்பிட்டிய, நம்பமுனுவ, தம்பே, படகத்தர வடக்கு, பெலன்வத்த மேற்கு, மக்கந்தான கிழக்கு, மாவித்தர வடக்கு, கெஸ்பேவ தெற்கு மற்றும் மடபாத ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை நாளை அதிகாலை 05 முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இதற்கிடையில், கொழும்பு மாவட்டத்தில் மஹரகம பொலிஸ் பிரிவில் உள்ள ஆரவ்வல வடக்கு கிராம சேவகர் பிரிவும் நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும்.