CCTV: ATM பணத்தினை கொள்ளையடிக்க முயற்சி! அனுராதபுரத்தில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV: ATM பணத்தினை கொள்ளையடிக்க முயற்சி! அனுராதபுரத்தில் சம்பவம்!


இன்று (06) காலை 6.45 மணி அளவில் அனுராதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இற்கு வைப்பு செய்வதற்காக எடுத்துவரப்பட்ட பணத்தை கொள்ளையிட முயற்சி செய்யப்பட்டிருந்தது.

மோட்டா சைக்கிளில் வந்த இருவர் வங்கி அதிகாரிகள் மீது மிளகாய் தூள் வீசி பணத்தை கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.

இதன்போது வங்கி அதிகாரிகளிடம் சுமார் 4 கோடி ரூபா பணம் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் பணத்தை கொள்ளையிட முயன்ற போது அதிகாரிகளுடன் போராடிய சந்தர்ப்பத்தில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதை அடுத்து கொள்ளைகாரர்கள் பணத்தை எடுக்காமல் தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெறும் விதம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியிருந்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.