BREAKING: நாட்டில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நோன்பு பெருநாள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: நாட்டில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நோன்பு பெருநாள்!


ஹிஜ்ரி 1442ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (12) மாலை தென்படாமையினால் நாளை மறுநாள் (14) நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, புனித ரமழான் 30 நாட்களை முழுமைப்படுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாளின் முதல் நாளாக கொண்டாடப்படும்.


இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை மேமன் சங்கம் ஆகியன இணைந்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளன.


அதேநேரம், அதிகப்படியான உலக வாழ் முஸ்லிம்கள் நாளைய தினம் (13) நோன்புப் பெருநாளைகொண்டாடவுள்ளனர்.


மேலும் இம்முறை நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், பெருநாள் தினத்தன்று அரசினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை கடுமையான பின்பற்றி கொண்டாடுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.