ஹிஜ்ரி 1442ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (12) மாலை தென்படாமையினால் நாளை மறுநாள் (14) நோன்பு பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, புனித ரமழான் 30 நாட்களை முழுமைப்படுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாளின் முதல் நாளாக கொண்டாடப்படும்.
இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை மேமன் சங்கம் ஆகியன இணைந்து இந்த அறிவிப்பை விடுத்துள்ளன.
அதேநேரம், அதிகப்படியான உலக வாழ் முஸ்லிம்கள் நாளைய தினம் (13) நோன்புப் பெருநாளைகொண்டாடவுள்ளனர்.
மேலும் இம்முறை நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலையில், பெருநாள் தினத்தன்று அரசினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளை கடுமையான பின்பற்றி கொண்டாடுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளனர்.