பாதாள உலகக்குழு உறுப்பினரான தினெத் மெலன் மபுலா எனும் ”ஊருஜுவா” கடுவலை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
27 வயதான இவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக நவகமுவ எனும் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்ட வேளையில் அங்கு ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.