மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மீதான பயங்கரவாத தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது!


மாலைதீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியுமான முஹம்மத் அப்துல்லா நஷீத் மீது நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது.

இதனை இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலத்தீவின் தலைநகரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஏற்பட்ட வெடிவிபத்தில் காயம் அடைந்த நிலையில்  முஹம்மத் அப்துல்லா நஷீத் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார்.

மிகவும் முக்கியமான இந்த தருணத்தில், இலங்கை மக்களும் அரசாங்கமும் அனைத்து வகையான வன்முறைகளையும் வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், மாலைதீவு மக்களுக்கும் அரசாங்கத்துக்குமான தனது ஒற்றுமையை ஒன்றிணைந்து வெளிப்படுத்துகின்றன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.