நான்கு மாவட்டங்களில் உள்ள 06 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
குறித்த பகுதிகள் நாளை (25) அதிகாலை 04.00 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, காலி, கம்பஹா மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 06 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் டயகம பொலிஸ் பிரிவு
சந்திரிகாமம் தோட்டத்தின் சந்திரிகாமம் பிரிவு
சந்திரிகாமம் தோட்டத்தின் NLDB விலங்குப் பண்ணை
இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட பொலிஸ் பிரிவு
குருவிட்ட கிராம சேவகர் பிரிவு
தெலகமுவ கிராம சேவகர் பிரிவின் நகர் பகுதி
காலி மாவட்டத்தில் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவு
ஊரவத்த கிராம சேவகர் பிரிவு
கம்பஹா மாவட்டத்தில் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு
இரியவெட்டிய கிராம சேவகர் பிரிவு