மாகாண எல்லைகளை கடக்க முயன்றோருக்கு நடந்தது இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாகாண எல்லைகளை கடக்க முயன்றோருக்கு நடந்தது இது தான்!

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ஞாயிறுக்கிழமை 34 வாகனங்கள் மாகாண எல்லைகளை கடக்க முயன்றதுடன், அவை அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறினார்.

மாகாண எல்லைகளை கடக்க முற்படும் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் நபர்களுக்காக இதுவரையில் அறிவுறுத்தல்கள் மாத்திரமே வழங்கப்பட்டன.

எனினும் இனிவரும் காலங்களில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல்மாகாணத்திற்கு பிரவேசிக்கும் வாகனங்கள் தொடர்பில் 14 பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருக்கின்றன.

அதற்கமைய 1583 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வாகனங்களில் பயணித்த 3452 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் பெரும்பாளானோர் அத்தியாவசிய சேவையின் நிமித்தமே சென்றுள்ளதுடன், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட 213 பேருக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறனார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.