நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கேகாலை தம்மிக்க என்பவரின் பாணி கொரோனா தொற்றை குணப்படுத்துவதற்கு உகந்தது அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
68 கொரோனா நோயாளர்களுக்கு இந்த பாணி வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த பாணியை அருந்திய எவருக்கும் கொரோனா தொற்று குணமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.