நாட்டில் கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் வசதிகள் நாட்டில் கிடைக்குமா என்பது குறித்து பொதுமக்களிடையே ஒரு அச்சம் ஊடுருவ ஆரம்பித்துள்ளது.
நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
இருப்பினும், நாட்டில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.