கொரோனா சடலங்களில் வைரஸ் உயிருடன் இருக்குமா? வெளியான புதிய தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா சடலங்களில் வைரஸ் உயிருடன் இருக்குமா? வெளியான புதிய தகவல்!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலில் 24 மணி நேரத்திற்கு மேல் வைரஸ் உயிருடன் இருக்காது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தடய அறிவியல் துறை தலைவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

இறந்தவரிடமிருந்து வைரஸ் பரவுவதற்கான ஆபத்து மிகவும் குறைவாகும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலில் மூக்கு மற்றும் தொண்டையில் 12 முதல் 24 மணி நேரத்திற்கு மேல் கொரோனா வைரஸ் செயல்பாட்டில் இருக்காது.

100 பேரின் உடல்களை சோதனை செய்தபோது இது எங்களுக்கு தெரியவந்தது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கையாள்பவர்கள் முககவசங்கள், கையுறைகள் மற்றும் பி.பி.இ கிட்கள் அணிந்து கொள்ளலாம்.

உயிரிழந்தவர்களின் எலும்புகள் மற்றும் சாம்பலை(அஸ்தியை) சேகரிப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதில் இருந்து கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு முற்றிலும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.