முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த 03 பொலிஸ் பிரிவுகளும் நேற்று (17) இரவு 11.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (18) முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை கொரோனா சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை வெளியிட்டு முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று மதியம் தீர்ப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.