சோபையிழந்த வெசாக்; வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காவலரண்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சோபையிழந்த வெசாக்; வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட காவலரண்கள்!


வெசாக் தினத்தை முன்னிட்டு கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் உட்பட ஏனைய பிரதேச பொலிஸ் நிலையங்கள், காரைதீவு, பெரியநீலாவணை பாதுகாப்பு படை காவலரண்கள், அம்பாறை மாவட்ட சில அரச காரியாலயங்கள், அரச வர்த்தக நிலையங்களில் பல வர்ண அலங்கார வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர் என பலரும் இணைந்து இந்த வெசாக் கூடுகளை தத்தமது பாதுகாப்பு அரண்களில் காட்சிப்படுத்தியுள்ளனர்.


நாட்டில் பரவலாக அதிகரித்து வரும் கொரோனா அலையின் காரணமாக இந்த வெசாக் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வழமையாக நடைபெறும் வெசாக் தன்சல் போன்ற எவ்வித விசேட நிகழ்வுகளுமில்லாது கொரோனா கட்டுப்பாட்டுடன் கூடிய ஆராதணைகளுடன் மட்டுமே இந்த வெசாக் பண்டிகை சிங்கள மக்களினால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய விசேட தினத்திலும் பாதுகாப்பு படையினர், இலங்கை பொலிஸார், சுகாதாரத்துறை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.


-நூருல் ஹுதா உமர்






Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.