இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
சந்தேக நபருக்கு சொந்தமான இணையவழி கணக்குகளை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் இவ்வாறான கருத்துகளை பதிவேற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவினரிடமும் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றங்களில் 14 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.