பொதுமக்களுக்கு வேண்டாம் சொல்லிவிட்டு இராணுவத் தளபதி திருமண வைபவத்தில் கலந்துகொண்டாரா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களுக்கு வேண்டாம் சொல்லிவிட்டு இராணுவத் தளபதி திருமண வைபவத்தில் கலந்துகொண்டாரா?


உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை இராணுவம் மறுத்துள்ளது. 


இராணுவ ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் கொரொனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இன்று முதல் அமுலாகும் வகையில் திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், நேற்றைய முன் தினம் கொழும்பில் உள்ள முன்னிணி ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற தனது சகோதரியின் மகளின் திருமண நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.


இது குறித்த புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன. இராணுவத் தளபதியின் சகோதரியின் மகள்கள் இன்னும் கல்வி கற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவ்வாறான நிலையில், தனது சகோதரியின் மகளின் திருமண நிகழ்வில் இராணுவத் தளபதி கலந்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்களை இராணுவம் மறுத்துள்ளது.


இக்கட்டான இந்த தருணத்தில் பொறுப்புடன் செயல்படவும், தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் இராணுவம் வேண்டுகோள் விடுத்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.