இலங்கையில் இன்றைய தினம் 1914 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதில் 54 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள். ஏனையவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 115,590 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 99,153 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி 709 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.