
2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்பட்டன.
இதற்கமைய 194,297 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பரீட்சை எழுதியவர்களில் 64.39 சதவீதமாகும்.
அத்துடன், பரீட்சைக்கு தோற்றியவர்களில் 86 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.