இலங்கை தேசிய வைத்தியசாலையில் இருந்து இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மருத்துவமனை ஊழியர் ஒருவரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட புகாரை தொடர்ந்து குறித்த சந்தேகநபர் மருத்துவமனை வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
மேலும் அவர் திருட முயன்ற இரண்டு சிலிண்டர்களும் மீட்கப்பட்டன.
பின்னர் அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களைத் திருட அவருக்கு ஆதரவளித்த மற்றொரு வைத்தியசாலை ஊழியரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)