நாளை (13) தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னதாக மே 31 வரை குறித்த பயணக் கட்டுப்பாடுகள் அமுலாகும் என அரசு அறிவித்திருந்த நிலையிலேயே தற்போது அந்த தீர்மானத்தில் இவ்வாறு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடுகள் எந்தவொரு வகையிலும் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.