சமையல் தேவைக்காக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதை தடுக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானியொன்று நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடன் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போத்தல்களில், பொதிகளில் அல்லது கொள்கலன்களில் மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனை செய்யப்படும் சமையல், உணவிற்கு பயன்படும் தேங்காய் எண்ணெய் ஆனது ஏனைய எந்தவொரு எண்ணெய் வகைகளின் அல்லது சேர்க்கையும் அற்றதாக காணப்பட வேண்டும் என இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு குறித்த வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடன் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போத்தல்களில், பொதிகளில் அல்லது கொள்கலன்களில் மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனை செய்யப்படும் சமையல், உணவிற்கு பயன்படும் தேங்காய் எண்ணெய் ஆனது ஏனைய எந்தவொரு எண்ணெய் வகைகளின் அல்லது சேர்க்கையும் அற்றதாக காணப்பட வேண்டும் என இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு குறித்த வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.