கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (19) நீர்வெட்டு வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று காலை 8.30 மணி முதல் குறித்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, பேலியகொடை, வத்தளை, மாபொல, ஜா-எல நகரம், கட்டுநாயக்க, சீதுவை நகர சபை பிரதேசம், களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல பிரதேச சபை பிரதேசம் ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.