தொற்றாளர்கள் என அறிவிக்கப்படுபவர்கள் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்படுபவர்களே என்றும், பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் சமூகத்தில் மேலும் பல தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏப்ரல் 15 திகதி முதல் நாட்டில் 44,000 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி திட்டமானது கைவசம் இருக்கும் தடுப்பூசிகள் முடிந்ததும் நிறுத்தப்படும் என்றும், அடுத்த தொகுதி தடுப்பூசிகளைப் பெற்ற பிற்பாடு தடுப்பூசி செலுத்தும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் தொற்றுநோயை மூடிமறைக்கிறதா என்று அவரிடம் வினவப்பட்ட போது, அது பொய்யானது என்றும், "நாங்கள் தொற்றுநோயை மறைக்க முயன்றால், நாங்கள் மறைக்கப்படுவோம்" என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)