இறுதி நேரத்தில் ரிஷாட் அழைத்து வரப்படவில்லை! ஆராயப்படுமென சபாநாயகர் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறுதி நேரத்தில் ரிஷாட் அழைத்து வரப்படவில்லை! ஆராயப்படுமென சபாநாயகர் தெரிவிப்பு!


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் இன்று -04- நாடாளுமன்றுக்கு அழைத்து வரப்படாமை தொடர்பில் ஆராய்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தால், அவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, நாடாளுமன்ற படைக்கல சேவிதர், குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அறியப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், இன்று முற்பகல் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வில், ரிஷாத் பதியுதீன் விவகாரம் தொடர்பில் ,எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது சபாநாயகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.