நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூரியுள்ளது.
இதற்கமைய மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக எதிர்வுக்கூரப்பட்டுள்ளது.
அத்துடன் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 50 மில்லமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.