இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு நான்கு குழந்தையின் தாய் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு நான்கு குழந்தையின் தாய் கொலை!


மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் பெண்ணொருவர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.


ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


இன்று (27) அதிகாலை உயிரிழந்த இப் பெண்ணின் வீட்டுக்கு வந்த சிலர் அவருடன் வாய்த்தகராறில் ஈடுப்பட்டுள்ளனர்.


இந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதில் குறித்த பெண் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இச்சம்பவத்தில் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஆயித்தியமலை காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.