பயங்கரவாதி சஹ்ரானுக்கு உதவிய நபர் இன்று கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயங்கரவாதி சஹ்ரானுக்கு உதவிய நபர் இன்று கைது!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிமிற்கு உதவியதுடன், அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் அம்பாறை ஓலுவில் பிரதேச திருமண பதிவாளரான 55 வயதுடைய நபரொருவர், இன்று (31) அதிகாலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்டர் தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்து, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே திருமண பதிவாளரான சுபைதீன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பதிவாளர் வீட்டில் கடந்த 2017 ம் ஆண்டு 2018ம் ஆண்டு சஹ்ரான் வந்து தங்கி சென்றுள்ளதாகவும், அவருக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே,குறித்த சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.