எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால், மே 21 முதல் 31 வரை இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு இலங்கை தற்காலிக பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வரும் விமானத்தில் அதிகபட்சமாக 75 பயணிகள் மாத்திரமே இருத்தல் அவசியம் என்றும் வருகை தரும் அனைவரும் (தடுப்பூசிகள் பெற்றவர்களும் உட்பட) 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்குள் நுழைய எந்தவித முன் அனுமதியும் பெற தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)