விமானம் நிலையம் திறக்கப்படும் தினம் அறிவிக்கப்பட்டது - இலங்கைக்கு வர அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமானம் நிலையம் திறக்கப்படும் தினம் அறிவிக்கப்பட்டது - இலங்கைக்கு வர அனுமதி!


இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை ஜூன் 01 முதல் நீக்க அரசு முடிவு செய்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபாலி தர்மதாச தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால், மே 21 முதல் 31 வரை இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு இலங்கை தற்காலிக பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு வரும் விமானத்தில் அதிகபட்சமாக 75 பயணிகள் மாத்திரமே இருத்தல் அவசியம் என்றும் வருகை தரும் அனைவரும் (தடுப்பூசிகள் பெற்றவர்களும் உட்பட) 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இலங்கைக்குள் நுழைய எந்தவித முன் அனுமதியும் பெற தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.