கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளாரென்றும் இது இலங்கையில் பதிவான முதலாவது கர்ப்பிணி மரணமென்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் ராகம - பட்டுவத்தை பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் அவர் இன்று (05) அதிகாலை உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.