ஊடகவியலாளர்களுக்கான அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊடகவியலாளர்களுக்கான அரசாங்க தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டை செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!


ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இறுதியாக வழங்கப்பட்ட அடையாள அட்டையின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. 


கடந்த வருடத்துக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.


இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள உள்ளிட்ட அனைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ள அவர், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


அரச தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கா வழங்கப்படும் அடையாள அட்டைகளை, இம்முறை முழுமையாக வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த வருடம் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் காலவரையை நீடித்துள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க அறிவித்துள்ள நிலையில் , கடந்த வருடத்துக்கான அடையாள அட்டைகளை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள், அவர்களது சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸாருக்கும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.