ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இறுதியாக வழங்கப்பட்ட அடையாள அட்டையின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துக்கான அடையாள அட்டையை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள உள்ளிட்ட அனைவருக்கும் கடிதம் அனுப்பியுள்ள அவர், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கா வழங்கப்படும் அடையாள அட்டைகளை, இம்முறை முழுமையாக வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால் கடந்த வருடம் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் காலவரையை நீடித்துள்ளதாக அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க அறிவித்துள்ள நிலையில் , கடந்த வருடத்துக்கான அடையாள அட்டைகளை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள், அவர்களது சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸாருக்கும் தெரிவித்துள்ளார்.