நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு நோயாளர்கள் மருந்து வகைகளை தமது வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக்கொள் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நோயளர்களின் நலன்கருதி குறித்த வசதியை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஏற்படுத்தியுள்ளது.
அதற்கமைய, கண்டி, குருநாகல், கொழும்பு - 1 , கொழும்பு - 4, கொழும்பு - 7, கம்பஹா ஆகிய பிரதேசங்களில் உள்ளவர்கள் மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு மருந்துகளை தத்தமது வீடுகளுக்கு வரவழைத்து பெற்றுக்கொள்ள முடியும் என மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது
கண்டி - 070 19 02 737
பேராதனை - 070 19 02 739
குருநாகல் - 070 17 18 318
கொழும்பு 01 - 070 19 02 740
கொழும்பு 04 - 070 19 02 741
கொழும்பு 07 - 070 19 02 742
கம்பஹா - 070 19 02 773