முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் 800 குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் மேல் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுக்களை இரண்டு விஷேட நீதிமன்றங்களில் அவர் முன்வைத்துள்ளார்.
கொலை, கொலை முயற்சி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறியமை போன்ற குற்றச்சாட்டுக்களும் அவற்றில் அடங்கியுள்ளது.