இந்தியாவின் 2ஆவது கட்ட கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், மிருகங்களையும் விட்டுவைக்கவில்லை.
இந்நிலையில் ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களுக்கும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு 08 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் குறித்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் உடல்நிலை கண்காணிப்பட்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.