கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,672 பேர் நேற்றைய தினம் இனங்காணப்பட்டனர்.
அதன்படி, சகல மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் உள்ளனர்.
ஆகக் கூடுதலாக கொழும்பு மாவட்டத்தில் 755 பேரும், மன்னார், முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஆகக் குறைவாக தலா, 02 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.