2020ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகள் நாளை வெளியீடு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2020ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை முடிவுகள் நாளை வெளியீடு?


மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நாளை (04) வெளியாகவுள்ளதாக பரீட்சை திணைக்களத்திலிருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.


மேற்படி பரீட்சை முடிவுகள் வெளியீடு கடந்த ஏப்ரல் 30 க்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் இசட் மதிப்பெண் கணக்கீடு இரட்டை சோதனை செயல்முறை காரணமாக மேலுமொரு வாரம் தாமதமானது. 


மேலும் பரீட்சை திணைக்கள அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, பரீட்சை முடிவு ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன, அது நாளை வெளியிடப்படும். முடிவுகள் www.doenets.lk எனும் உத்தியோகபூர்வ வலைதளத்தில் வெளியிடப்படும் என்றார்.


அதேநேரம், பரீட்சை திணைக்கள அதிகாரிகள் இதுவரை சரியான வெளியீட்டு திகதி அல்லது நேரத்தை அறிவிக்கவில்லை. 2020 உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், செப்டம்பர் 2021 க்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


-எம்.எம் அஹமட் 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.