யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அருகே புதைக்கப்பட்ட நிலையில் இருந்த கிளேமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருட்களுடன் ஒரு சந்தேக நபரை நேற்று (28) கைது செய்தனர்.
இராணுவ புலனாய்வு வட்டாரங்களின்படி, சந்தேக நபர் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகளின் கடற்படையில் இருந்த ஒருவர் எனவும், அவரிடம் இருந்து 02 கிலோ எடையுடைய கிளேமோர் குண்டு ஒன்றும், டி -56 ரக துப்பாக்கிகளுக்கான 14 வெடிமருந்துகள், பிஸ்டல் ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 45 வெடிமருந்துகள், 12.7 ரக வெடிமருந்து 01 மற்றும் வெடிமருந்துகள் மற்றும் 02 மீட்டர் டெட்டனேட்டர் நூல் காணப்பட்டது.
இந்நிலையில், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.